Tamil Book Man provides Tamil Books Online,English Books Online,online books,online book store,asuran books,motivation. Bharathidasan Kavithaigal - kar. Tamil Typography on Instagram: “Just because we see or hear about the thing in real life or social media doesn't make it true. Let's face it, it's all about the.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.” ― Subramanya bharathi. “ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! சின்னஞ் சிறுகுருவி போலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா! பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது மனிதர்க்கு தோழனடி பாப்பா! வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா! காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா! தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன தீங்குவர மாட்டாது பாப்பா! பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா! அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ திடங்கொண்டு போராடு பாப்பா! தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத் தொழுது படித்திடடி பாப்பா! செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா! வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா! கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப! வேத முடையதிந்த நாடு,-நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு; சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா! சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர். உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர முடையநெஞ்சு வேணும்;-இது வாழும் முறைமையடி பாப்பா!” ― Subramanya bharathi.
“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே சாலப் பலபலநற் பகற் கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே, ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன், பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்; ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்; ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்; ‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே. திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்; “நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
![Bharathidasan Bharathidasan](/uploads/1/2/5/5/125560779/546311404.jpg)
![Bharathiyar paadalgal in tamil Bharathiyar paadalgal in tamil](/uploads/1/2/5/5/125560779/388920052.jpg)
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே. பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள். “நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்; பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.” ― Subramanya bharathi. “தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர் நரகத் துழலுவதோ?
கடுமை யுடைய தடீ!எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான் அங்கு வருதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள். கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை ஆயிரங் கோடி முறை நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி!” ― Subramanya bharathi. “நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்” ― Subramaniya Bharathiyar.
“திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு தக்கை யடிக்குது காற்று-தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட வெட்டி யடிக்குது மின்னல்,-கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; கொட்டி யிடிக்குது மேகம்;-கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று; சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா! அண்டம் குலுங்குது,தம்பி!-தலை ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர் செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!” ― Subramanya bharathi.
Etext in Tamil Script - TSCII format (v. 1.7) Etext preparation & Proof-reading: Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, India Etext prep in pdf format: Dr. Kalyanasundaram, Lausanne, Switzerland This pdf file is based on InaimathiTSC font embedded in the file. Hence this file can be viewed and printed on all computer platforms: Windows, Macintosh and Unix without the need to have the font installed in your computer. © Project Madurai 2003 You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.